Skip to content
Home » 75 நாட்கள் பிரச்சாரம்.. 200 பொதுக்கூட்டங்கள் பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பு

75 நாட்கள் பிரச்சாரம்.. 200 பொதுக்கூட்டங்கள் பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பு

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான தற்போதைய லோக்சபா தேர்தலுக்கான கடைசி கட்ட ஓட்டுப் பதிவு நாளை நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக சார்பில் பலரும் தேர்தல்பிரச்சாரம் மேற்கொண்டாலும் பிரதமர் மோடியின் பிரச்சாரம் தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த தேர்தலை பொருத்தவரை
பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாபின் ஹோஷியார்புர் லோக்சபா தொகுதியில், தன் பிரசாரத்தை நேற்று நிறைவு செய்தார். மார்ச் 16ம் தேதி, தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து பிரசாரத்தை துவக்கிய பிரதமர் மோடி, 75 நாட்கள் தொடர்ந்து மாரத்தான் பிரசாரத்தில் ஈடுபட்டார். கடந்த 75 நாட்களில், நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து 200 பொதுக் கூட்டங்கள், ரோடு ஷோக்கள் ஆகியவற்றை பங்கேற்றார். முதன்மையான நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், ‘டிவி சேனல்’கள் உட்பட 80க்கும் அதிகமான பேட்டிகளை அளித்துள்ளார். குறிப்பாக உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் பிரதமர் பங்கேற்றுள்ளார்.  ஒவ்வொரு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் நிறைவின் போதும், பயணம் மேற்கொள்வது பிரதமரின் வழக்கம். கடந்த 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்ததும், மஹாராஷ்டிராவின் சத்தாரா மாவட்டத்தில் உள்ள பிரதாப்காட் மலைக்கோட்டைக்கு பிரதமர் சென்றார். 1659, நவ., 10ல் நடந்த போரில், பிஜாபூர் சமஸ்தானத்தை ஆண்ட சுல்தான் அப்சல் கானை, மராத்திய மன்னர் மாவீரர் சிவாஜி தோற்கடித்தார்.  அந்த கோட்டையில் சில தினங்கள் பிரதமர் தங்கியிருந்தார். 2019 தேர்தல் பிரசாரம் முடிவடைந்ததும், உத்தரகண்டின் கேதார்நாத்தில் உள்ள குகையில் தியானத்தில் ஈடுபட்டார்.  இந்த முறை, தமிழகத்தின் கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள விவேகானந்தா பாறையில் தியானத்தில் ஈடுபட்டு உள்ளார். நேற்று மாலை துவங்கிய பிரதமரின் தியானம், நாளை மாலையுடன் நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!