2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலையின் என்மண் என்மக்கள் என்கிற பாதயாத்திரையின்நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி நடைபெறும் மிக பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கொண்டு பிரதமர் மோடி பேசுகிறார். பின்னர் அவர் அங்கிருந்து கேரளா புறப்பட்டு செல்கிறார். 28-ந் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கு துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கலந்து கொள்கிறார். பின்னர், குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை 28-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதேபோல் ரூ.550 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்ட புதிய ரெயில்வே தூக்கு மேம்பாலத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மிகப்பெரிய 2 திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவதையொட்டி தூத்துக்குடியில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு நாள் பயணமாக வரும் 27ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி …
- by Authour
