பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காந்திநகரில் வசித்து வரும் தனது தாயார் ஹீராபென்னை சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து சென்றார். மோடியின் தாயார் ஹீராபென் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தகது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹீராபென் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன… மேலும் டில்லியில் இருந்து மோடி அகமதாபாத் விரைந்துள்ளார்…
