Skip to content
Home » ஆர்.டிமலை ஜல்லிக்கட்டு…..6 காளைகளை அடக்கிய வீரர் படுகாயம், இன்னொரு வீரர் பார்வை பறிபோனது

ஆர்.டிமலை ஜல்லிக்கட்டு…..6 காளைகளை அடக்கிய வீரர் படுகாயம், இன்னொரு வீரர் பார்வை பறிபோனது

கரூர் மாவட்டம் ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதில்  திருச்சி அடுத்த மருதாண்டாகுறிச்சியை சேர்ந்து முத்துக்குமார் என்ற இளைஞர் 6 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். அவர் 7வது காளையை அடக்க முயன்றபோது காளை அவரை முட்டி தள்ளியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அங்கு அவருக்கு முதல ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 6 காளைகளைப் பிடித்து முதலிடத்தில் இருந்த மருதாண்டாகுறிச்சியை சேர்ந்த முத்துக்குமார் மாடு முட்டியதில் காயம். மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

பள்ளப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்ற வீரர் சோர்வைடைந்த நிலையில்  மைதானத்துக்குள் தடுப்பு கம்பி வேலி ஓரம் அமர்ந்திருந்தார். அப்போது பாய்ந்து வந்த ஒரு காளை அவரது முகத்தில் குத்தியது. இதில் அவரது கண்ணில் பலத்த காயம்  ஏற்பட்டது. உடனடியாக அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஆர்டி. மலை ஜல்லிக்கட்டில்  10 காளைகளை அடக்கிய  நாமக்கல் காா்த்திக் முதலிடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!