அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.