கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள வெள்ளிக்குப்பம் பாளையத்தில் கடை எண்1811 கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது
இந்த கடையின் சூப்பர்வைசராக விஜய் ஆணந்த் என்பவரும் சேல்ஸ் மேன்களாக கரியபெட்டன்,குணசேகரன் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். சம்பவத்தன்று விற்பனையாளர்கள் கடையில் பணியில் இருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கடையில் இருந்த ஊழியர்களிடம் கடையின் எண்ணை கேட்டனர். திடீரென அவர்கள் கையில் மறைத்து வைத்திருந்த இரண்டு பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து கடையில் வீசினர்.
இதனால் தீ பற்றி எரிய தொடங்கிய நிலையில் கடையில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு உள்ளே இருந்த மூவரும் வெளியில் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து தடயங்களையும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.