பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவர் நேற்றிரவு பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். கல்பாடி பிரிவு சாலை அருகே வந்த போது அவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று கட்டுபாட்டை இழந்து ராமச்சந்திரன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ராமசந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரானது சாலையோரத்தில் கவிழ்நததில் அதில் பயணித்த 4 பேர் காயம் ஏற்பட்டு பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் நகர போலீசார் இறந்த ராமச்சந்திரனின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துடன் காரில் வந்தவர்கள் யார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமச்சந்திரனின் இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி… 4பேர் காயம்…
- by Authour
