Skip to content
Home » பெரம்பலூர் அருகே டூவீலரில் சென்ற நபர் விபத்தில் மரணம்…….

பெரம்பலூர் அருகே டூவீலரில் சென்ற நபர் விபத்தில் மரணம்…….

பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் வட்டம் பெருமத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடை அருகே வைத்தியநாபுரம் கிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை பெருமத்தூர் அரசு மது பான கடை அருகே வளைவில் தானாக விழுந்து உள்ளார். வளைவில் விழுந்த உடன் சம்பவ இடத்திலே மரணம் அடைந்து உள்ளார் இச்சம்பவம் சம்மந்தமாக மங்களமேடு காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது தகவலின் அடிப்படை யில் விரைத்து வந்த காவல் துறை உடலை கைபற்றி பிரோத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்தவர் எதுக்காக மதுபான கடை வழியாக வந்தார் மது அருந்தி மீண்டும் தனது சொந்த ஊருக்கு சென்றார என பல கோணத்தில் போலிசார் விசாரனை மேற்கொண்டு உள்ளனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது பெருமத்தூர் கிராமத்தில்இருக்கும் மதுபான கடையால் இவ் பகுதியில் விபத்து ஏற்பட்டு இதுவரை சுமார் 10 க்கும் மேற்பட்டோர் இறந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் குறுகின்றனர் மேலும் இந்த இடத்தில் மதுபான கடையில் இருக்க வேண்டாம் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை தொடர்ந்து இது போல் சம்பவம் நடைபெறுவதால் மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!