Skip to content

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…. பெரம்பலூர் அருகே துணிகரம்…

பெரம்பலூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்லம். இவர் கணவர் பெருமாள் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இவருக்கு ரமேஷ் என்ற மகன் திருச்சியில் தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார் . இரண்டாவது மகன் சதீஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் . இக்காலத்தினால் செல்லம் அடிக்கடி மகன் வீட்டிற்கு சென்று விடுவார் . சொக்கநாதபுரத்தில் எப்பயாவது வந்து ஒரு வாரம் தங்கி விட்டு செல்வார். இந்நிலையில் 20 நாட்களுக்கு முன்பு திருச்சி சென்று விட்டு நேற்று இரவு அருகிலுள்ள நல்லதம்பி மனைவி சர்மிளா என்பவர் லைட்டு போட சென்ற போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டதை பார்த்துள்ளார். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு சரவணன் எஸ்ஐ நேரில் சென்று விசாரணை செய்தலில் 3 பவுன் 2000 பணம் திருட்டு போனது தெரியவந்துள்ளது. பூட்டியிருக்கும் வீட்டை நோட்டமிட்டு திருடும் மர்ம கொள்ளையர்களை பெரம்பலூர் நகர போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!