Skip to content
Home » பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை -ரூ.7 லட்சம் கைவரிசை….

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை -ரூ.7 லட்சம் கைவரிசை….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமம் காலனி பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை இவரது மனைவி தமிழரசி (56). தமிழரசி கணவர் அப்பாதுரை ஹோட்டல் சமையல் மாஸ்டராக பணியாற்று இறந்து விட்டார். இந்நிலையில் தமிழரசி தனது மகன் விஜயகுமார் உடன் வசித்து வந்தார்.

காலனி தெருவில் தமிழரசிக்கு இரண்டு வீடுகள் உள்ளன. அதில் தமிழரசி பகலில் பழைய வீட்டில் தங்கி அங்கு சமைத்து சாப்பிட்டு வந்தார்.  பின்னர் இரவில் அதே பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய வீட்டில் தங்கிக் கொள்வார். மகன் விஜயகுமார் குடும்பத்துடன் தனி வீட்டில் வசித்து வந்தார்.

அதேபோல் நேற்றும் தமிழரசி வழக்கம்போல் பகலில் பழைய வீட்டில் தங்கி விட்டு இரவில் வீட்டின் பூட்டை பூட்டிவிட்டு புதிய வீட்டிற்கு தூங்குவதற்காக சென்றார். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் தமிழரசி வீட்டின்

பூட்டை உடைத்தும் வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்தும் அதிலிருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இந்நிலையில் தமிழரசி வீடியோ காலை 5 மணி அளவில் பழைய வீட்டை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் மேலும் கைரேகை போலீசார் மோப்பநாய் கொண்டு தடய அறிவியல் பரிசோதனை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!