கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் கோழியூர் கிராமத்தைச் சேர்ந்த நேரு என்ற 50 வயதுடைய நபர் இன்னோவா காரில் துறையூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி காரில் அதிவேகத்தில் வந்துள்ளார்.பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து அதே ஊரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்பவரின் சைக்கிள் கடையில் புகுந்தது .இதில் கார் ஓட்டுநர் தலையில் காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.சைக்கிள் கடையில் ராமச்சந்திரன் இல்லாததால் கடையின் சுவர் மட்டும் இடிந்து சேதமடைந்தது இருப்பினும் கடையின் அருகே அமர்ந்திருந்த மதியழகன் என்பவர் மீது காரின் உதிரி பாகம் ஒன்று பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
