Skip to content

2வது திருமணம் செய்ததால் ஆத்திரம்.. தந்தையை அடித்துக்கொன்ற மகன்..

பெரம்பலூர் பாரதிதாசன் நகர் முதல் தெருவில் வசித்து வருபவர்கள் ராமகிருஷ்ணன் – மலர் கொடி தம்பதியினர்.  ராமகிருஷ்ணன் சினிமா தியேட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் வெங்கடேசன்(24) என்ற மகன் உள்ளார் . கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.  இதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. மலர்கொடியும் வெங்கடேசனும் ராமகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுளளனர்.

ஒரு கட்டத்தில் வெங்கடேசன் வீட்டின் ஓட்டை உடைத்து சண்டையில் ஈடுபட்டதுடன் ராமகிருஷ்ணனை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த ராமகிருஷ்ணன் வீட்டின் பின்புறம் தள்ளாடி கீழே விழுந்து கிடந்துள்ளார். இன்று அதிகாலை வீட்டின் அருகில் வசிக்கும் ராமகிருஷ்ணனின் தாயார் நீலம்மாள் வந்து பார்த்தபோது ராமகிருஷ்ணன் நீண்ட நேரம் அப்டியே கிடந்துள்ளார். சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் கூச்சல் இட்டு அழைத்துள்ளார்.  அவர்கள் வந்து பார்த்தபோது மூக்கில் ரத்தம் வந்த நிலையிலும் தலையில் பின்புறம் அடிபட்ட நிலையிலும் காலில் ரத்த காயங்களுடன் ராமகிருஷ்ணன் இறந்து கிடந்துள்ளார்.  பெரம்பலூர் போலீசார் நடத்திய விசாரணையில் ராமகிருஷ்ணனின் மகனும் முதல் மனைவி மலர்கொடியும் சேர்ந்து அடித்துக் கொன்றது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!