Skip to content
Home » பெரம்பலூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தெருமுனை பிரச்சாரம்…

பெரம்பலூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தெருமுனை பிரச்சாரம்…

  • by Senthil

பெரம்பலூரில் நுகர்வோர் நல மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதனை அஸ்வின்ஸ் குழுமதலைவர் கே.ஆர்.வி கணேசன் தொடங்கிவைத்து வாழ்த்தினார்.அதனைத்தொடர்ந்து புதியபேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.அதில் நுகர்வோர் யார் என்றும் நுகர்வோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த தெருமுனை பிரச்சாரக்கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!