Skip to content

திருச்சி பஸ்- லாரி மோதல்….. பெண் பலி….15 பேர் காயம்

  • by Authour

புதுக்கோட்டையில் இருந்து இன்று மதியம் ஒரு தனியார் பஸ் திருச்சி நோக்கி  சென்று கொண்டிருந்தது. களமாவூர் ரயில்வே கேட் அருகே வந்தபோது அந்த பஸ் சும், எதிரே வந்த லாரியும் நேருக்கு  நேர் மோதிக்கொண்டது.

இதில் பஸ்சில் இருந்த ஒரு பெண் இறந்தார்.  அந்த பெண் யார் என்று உடனடியாக தெரியவில்லை. 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். விபத்துக்குள்ள பஸ் டிரைவர், கண்டக்டர் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த விபத்து குறித்து  போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!