Skip to content
Home » தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டேன்… பிரபல நடிகர் ‘திடுக்’ தகவல்..

தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டேன்… பிரபல நடிகர் ‘திடுக்’ தகவல்..

நந்தமுரி பாலகிருஷ்ணா பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் நிகழச்சியில் கலந்து கொண்ட நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண்  கூறியதாவது.. படிக்கும் போது எனக்கு மனச்சோர்வு அதிகமாக இருந்தது.  ஆனால் நான் அதை எதிர்த்துப் போராடினேன். 17 வயதில், தேர்வுகளின் அழுத்தம் காரணமாக என் மனச்சோர்வு கூட்டியது. என் மூத்த சகோதரனின் (சிரஞ்சீவி) உரிமம் பெற்ற ரிவால்வரைப் பயன்படுத்தி அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் என் உயிரை மாய்த்துக் கொள்ள திட்டமிட்டிருந்தேன். எனது மூத்த சகோதரர் நாகபாபு மற்றும் மைத்துனர் சுரேகா ஆகியோர் தன்னை காப்பாற்றினர். “என் அண்ணன் (சிரஞ்சீவி) என்னிடம், ‘எனக்காக மட்டும் வாழு.. நீ எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தயவுசெய்து வாழ கற்றுக்கொள்’ என அட்வைஸ் செய்தார். அப்போதிருந்து, நான் என்னை நானே கற்றுக்கொண்டேன், புத்தகங்களைப் படிப்பது, கர்நாடக இசை, தற்காப்புக் கலைகள் மற்றும் பிற முயற்சிகளில் ஆறுதல் கண்டேன் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!