Skip to content

திருச்சி…. மூட்டை மூட்டையாக குட்கா……. கன்டெய்னருடன் பறிமுதல்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில்  அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்திருந்தாலோ  அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ஆன குட்கா பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தால் உடனடியாக கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் தயங்காமல் தெரிவிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 10.09.2024 அன்று பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகாரைத் தொடர்ந்து, ஓலையூர் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்திவரும் நல்லுசாமி என்பவருக்கு சொந்தமான கடையிலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் 4,390 கிலோ  பறிமுதல் செய்யப்பட்டது.

அவரை விசாரித்ததில் அவர் ஓலையூரில் உள்ள போசாங்கு (த/பெ கிருஷ்ணமூர்த்தி) என்பவரிடமிருந்து வாங்கி விற்பனை செய்ததாக கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் போசாங்கு  பயன்படுத்திய வாகனம் பொலிரோ Pickup TN45CD7125 மற்றும் மாருதி ஆம்னி TN31BS8785 ஆகிய வாகனங்களை சோதனை செய்தபொழுது அவற்றில் விற்பனைக்காக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக் குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டு 9.720 கிலோ மற்றும் அவரது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்த குட்கா பொருட்களிலிருந்து வழக்கு போடுவதற்காக சட்டபூர்வ மூன்று உணவு மாதிரி எடுத்தது போக மீதமுள்ள பான்பராக் குட்கா போன்ற பொருட்களையும், இரண்டு வாகனங்களையும், கிருஷ்ணமூர்த்தி, ஒட்டுநர் போசாங்கு மற்றும் நல்லுசாமி ஆகிய மூன்று நபர்களையும் மணிகண்டம் காவல் நிலையத்தில் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டு புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போசாங்கு என்பவரை விசாரித்ததின் பேரிலும் 11.09.2024 வரபெற்ற தகவலின் அடிப்படையிலும் மதியம் 2 மணிக்கு திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் அருகே பிரபல பார்சல், அலுவலகம் சென்று கண்டெய்னர் லாரி KA01AH4849 வாகனத்தை சோதனை செய்த பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் 190 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தடைசெய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்களிலிருந்து வழக்கு போடுவதற்காக
சட்டபூர்வ நான்கு உணவு மாதிரிகள் எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பட்டது.

மேற்படி பார்சல் சர்வீஸ்
வாகனம் KA01AH4849- யும், மூன்று சட்டபூர்வ உணவு மாதிரி எடுத்தது போக மீதமுள்ள பான்பராக் மற்றும் குட்கா பொருட்களையும் மேலும் மேற்கண்ட மூன்று நபர்களையும்
எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா பொருட்களை விற்பனை செய்ததற்கு உடந்தையாக இருந்த பார்சல் அலுவலக மேலாளர் கருணாநிதி த/பெ பழனி, ஓட்டுநர் செந்தில் த/பெ
பச்சமுத்து, போசாங்கு த/பெ ரத்தினம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி த/பெ ராசு ஆகியோர் மீது காவல்துறை
மூலம் நடவடிக்கை எடுக்க கோரி எடமலைபட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!