Skip to content

பாமாயில் விவசாயம் செய்யாதவர்களை வெளிநாடு டூர் அழைத்துச் செல்வதற்குக் கண்டனம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பர் மாதத்துக்கான, விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் , நடைபெற்றபோது . சீர்காழியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளரான வீரமணி என்ற விவசாயி, கூறும்போது,குறிப்பிட்ட மின்மோட்டாரை பொருத்தினால் மட்டுமே, அரசுமானியம் வழங்கப்படும் என, தெரிவிக்கின்றனர். அந்த நிறுவனங்கள் மயிலாடுதுறையில் இல்லை, மற்ற மாநிலங்கள் விவசாயிகள் கணக்கிலேயே மான்யம் வரவு வைப்பதுபோல் ஏன் வைக்கக்கூடாது என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டமா, அல்லது குறைகளைக் கேட்கும் கூட்டமா, என தெரியவில்லை என்றார். மற்றொரு விவசாயி ஒருவர், எண்ணெய்ப்பனை விவசாயம் செய்யும் நாங்கள், வெளிநாடு செல்ல அனுமதி இல்லை. ஆனால் சம்பந்தம் இல்லாதவர்களை வெளிநாடு அனுப்பும் திட்டத்தை கைவிடவேண்டும்,இதைக்கேட்ட தோட்டக்கலைத் துறை அலுவலர், பதில் கூற முடியாமல் வெளியேறிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!