திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள முல்லை நகரை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது மனைவி, மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மகளை கழுத்தை அறுத்து கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னொரு மகன் விடுதியில் தங்கியிருந்ததால் அவன் தப்பிக்கொண்டான். இன்று காலை மகன் வீட்டுக்கு போன் பேசியபோது யாரும் எடுக்காததால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
அதன்பேரில் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தபோது தான் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. அவர் ஏன் இந்த செயலில் இறங்கினார். கடன் தொல்லையா, அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரிக்கிறார்கள்.