சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக தொண்டர்கள் மீட்புகுழு மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது.. அ.தி.மு.க., ஒன்றிணைவதை பழனிசாமி விரும்பாததால், வேறு வழியின்றி, அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்புக் குழு சார்பிலும், தேர்தலில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவெடுத்த பின், அக்கூட்டணியில் நம் சார்பில் போட்டியிடுவதற்கு வசதியாக, 16 தொகுதிகள் கேட்டோம். அவர்கள் ஆறு தொகுதிகளை தர முன்வந்தனர். ஆனால், நம் தரப்பிலான ஆட்கள் போட்டியிட தயங்கினர். வேறு வழியின்றி ராமநாதபுரம் தொகுதியில் நான் மட்டும் களம் இறங்கினேன். மக்களும், தொண்டர்களும் நம் பக்கம் உள்ளனர். தனிக்கட்சி துவக்கும் எண்ணம் கிடையாது. அ.தி.மு.க.,தான் நம் கட்சி. விரைவில் ஒன்றிணைவோம். பழனிசாமி, கே.பி.முனுசாமி, உதயகுமார் என, ஒரு சிலர் மட்டும் அ.தி.மு.க., ஒன்றிணைய தடைக்கல்லாக உள்ளனர் இவ்வாறு பேசிய ஓபிஎஸ் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து பேச கட்சியினரை அழைத்து கூட்டம் போடுவதாக பழனிசாமி தெரிவித்தார். ஆனால், இணைப்பு குறித்து பேசக்கூடாது என வாய்ப்பூட்டு போட்டு விட்டார்.
அ.தி.மு.க.,வில் இருந்து எங்களிடம் பலரும் பேசுகின்றனர். யார் பேசினர்; என்ன பேசினர் என்பதையெல்லாம் இப்போதைக்கு வெளியில் கூற இயலாது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கோபமாக பேசுவார். ஆனால், நல்ல மனிதர், நல்ல கருத்தை கூறுவார். கட்சி ஒன்றிணையாமல் எந்த தேர்தலிலும் வெற்றி பெற இயலாது என, அவர் கூறியுள்ளார். அவருடைய கருத்துதான், ஒட்டுமொத்த அ.தி.மு.க., தொண்டர்கள் கருத்து, என்றார்.
