Skip to content
Home » ஈரோடு கிழக்கில் நாளை ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம்…

ஈரோடு கிழக்கில் நாளை ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம்…

  • by Senthil

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார். அவர் கட்சியின் தீவிர விசுவாசி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். அவரை ஆதரித்து அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி ஆகியோர் ஏற்கனவே பிரசாரம் செய்து வருகிறார்கள். நாளை முதல் நானும், கழக நிர்வாகிகளும் பிரசாரத்தில் ஈடுபடுவோம். இந்த தேர்தலில் எங்களுடைய நிலையை, ஜனநாயக பண்பை சொல்வோம். தீர்ப்பளிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் வாக்காளர்களிடம் இருக்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!