Skip to content
Home » ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

திருச்சி பொன்மலையில் உள்ள ஜி-கார்னர் மைதானத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழா – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு ஓபிஎஸ் அணியினர் சார்பில் இன்று நடைபெற்றது. அதிமுக தலைமை கழகம் வடிவில் இந்த மாநாட்டிற்கான மேடை அலங்கரிக்கப்பட்டு கிட்டத்தட்ட 20,000 அதிகமான தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகளால் மாநாடு நடைபெறும் இடம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது கண்கவர் நிகழ்வாக அமைந்தது. இந்த மாநாட்டில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இந்த மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த பாண்டிதுரை (55) என்பதும் இவர் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தன்னுடைய பாதுகாப்பிற்காகவே கத்தியை எடுத்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது எந்த புகார் யாரும் கொடுக்காததால் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!