Skip to content
Home » தமிழ்மகன் உசேன் செய்றது சரியில்லயாம்.. மீண்டும் ஆரம்பித்தது ஓபிஎஸ் தரப்பு ..

தமிழ்மகன் உசேன் செய்றது சரியில்லயாம்.. மீண்டும் ஆரம்பித்தது ஓபிஎஸ் தரப்பு ..

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது.. ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யாத தென்னரசுவை அறிவித்துளளது ஏற்புடையதல்ல.  அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பிய கடிதம் வேதனை, மற்றும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவைத்தலைவர் தமிழகன் உசேன் நடுநிலையை தவறியுள்ளார்.  உரிமையும், தங்கள் யாருக்கு வாக்களிக்கிறோம் என்ற ரகசியத்தை காப்பாற்றும் உரிமையும் பிரிக்கப்பட்டுள்ளன.  யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பொதுக்குழு முன்பு வைக்க வேண்டும்.  சட்ட விரோதமான செயலுக்கு நாங்கள் உடந்தையாக இருக்க மாட்டோம்.  உச்சநீதிமன்றம் கூறியதை நேர்மையாக நிறைவேற்றவில்லை எனவும் இது குறித்து தேர்தல் ஆணையடத்திடம் முறையிட உள்ளதாகவும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!