Skip to content
Home » ஒரே இரவில் மனைவியை 2 முறை கடித்த பாம்பு… ஏவிய கணவன்….

ஒரே இரவில் மனைவியை 2 முறை கடித்த பாம்பு… ஏவிய கணவன்….

  • by Senthil

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூரில் கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்த நபரை 24 மணி நேரத்தில் இரண்டு முறை இந்த பாம்பு கடித்து உள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள மந்த்சூரை சேர்ந்தவர் மோஜிம். இவரது முதல் மனைவி சானு பி சில ஆண்டுகளுக்கு முன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதை தொடர்ந்து அவர் அஜ்மேரி ஹலிமாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் பிரிந்து சென்ற முதல் மனைவி சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் வந்துவிட்டார்.இப்போது மோஜிமுக்கு இரண்டாவது மனைவியை பாரமாகிவிட்டார்.இதனால் 2 வது மனைவியை தீர்த்துகட்ட திட்டம் தீட்டினார். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பாம்பு பிடிக்கும் நண்பர் ஒருவருடன் பேசி விஷப்பாம்புடன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். பாம்பு பிடிப்பவர் மிக கொடுமையான விஷம் கொண்ட பாம்பான ரஸ்ஸல் வைப்பருடன் மோஜிமின் வீட்டிற்கு சென்று உள்ளார். ஜன்னல் வழியாக பாம்பை விட்டிற்குள் விட்டு உள்ளார். வீட்டில் 2வது மனைவி ஹலிமா மட்டும் இருந்துள்ளார்.அதே இரவில் ஹலிமாவை பாம்பு கடித்துள்ளது.காலையில் ஹலிமா இறந்துவிடுவார் என்று மோஜிம் எதிர்பார்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!