Skip to content
Home » வீடு இடிந்து மூதாட்டி பலி…. கரூர் அருகே பரிதாபம்..

வீடு இடிந்து மூதாட்டி பலி…. கரூர் அருகே பரிதாபம்..

  • by Senthil

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் கந்தசாமி (75) என்பவர் தனது மனைவி லட்சுமியுடன் (70).வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு, பெற்றோர்கள் தனியாக வசித்து வருகின்றனர்.

இன்று காலை வழக்கம்போல் தூங்கி எழுந்ததும் கந்தசாமி வெளியே சென்று விட்டார். அப்போது சுமார் 6:30 மணி அளவில் மூதாட்டி லட்சுமி வீட்டிற்குள் காப்பி போட சென்றுள்ளார். சுமார் 50 வருட பழமையான வீடு என்பதால், திடீரென்று வீட்டின் மேல் கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய லட்சுமி சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி இறந்துள்ளார். வீடு இடிந்து விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வாங்கல் காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மூதாட்டி உடல் இடுபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!