தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் நேற்று இரவு பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தை யொட்டி நேற்று மன்னார்புரம் பகுதியில் பாஜக சார்பில் பல இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. .இந்த பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்ததாக திருச்சி கண்டேன்மென்ட் மற்றும் கேகே நகர், ஏர்போர்ட் போலீசார் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டி முத்து, உறையூர் மண்டல் தலைவர் ராஜேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
