Skip to content

பாஜகவுடன் கூட்டணி இல்லை…. அதிமுக அதிரடி அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை  பேரறிஞர் அண்ணாவை பற்றி விமர்சனம் செய்தது அதிமுகவை  கொந்தளிக்க செய்துள்ளது. இந்த நிலையில் அண்ணாமலை நான் பேசியது சரிதான். அதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டணி தர்மம் குறித்து பேச  அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை.   தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவெடுப்போம்.  அண்ணாமலை செயல்பாடு குறித்து ஏற்கனவே பாஜக மேலிடத்தில் புகார் செய்துள்ளோம். பல முறை எச்சரித்தும் அண்ணாமலை அலட்சியப்படுத்துகிறார். பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை.

அதிமுக தொண்டர்கள் சிங்க கூட்டம். சிங்க கூட்டத்தை பார்த்து சிறு நரி ஊளையிடுகிறது.  பிஜேபி இங்கு காலூன்ற முடியாது. எங்களை வைத்து தான் உங்களுக்கு அடையாளம்.   பாஜகவுக்கு காலே இல்லை. எப்படி காலூன்ற முடியும். இது கட்சியின் கருத்து தான்.  நான் தனிப்பட்ட கருத்தை பேசமாட்டேன். இப்போதைக்கு பாஜகவுடன்  கூட்டணி இல்லை. தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.பாஜக தனித்து நின்றால் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் தான் கிடைக்கும். பாஜக கூட்டணி இல்லை என்றால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. தனித்து நின்று அண்ணாமலையால் வெற்றி பெற முடியுமா? கட்சி மேலிடம் சொல்லித்தான் இவர் இப்படி பேசுகிறார்.

கட்சியின் முன்னோடிகளை விமர்சிப்பதை ஏற்க முடியாது. அதிமுக  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்  அண்ணாமலை மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதிமுக தொண்டர்கள் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறார்கள்.  அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்த இப்படி பேசுகிறார்.  இவர் தகுதி இல்லாத தலைவர். தலைக்கனத்தில் இப்படி பேசுகிறார்.  எந்த பூச்சாண்டிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!