Skip to content

இன்று நிதி ஆயோக் கூட்டம் …இண்டியா கூட்டணி புறக்கணிப்பு- மம்தா பங்கேற்பு

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் கமிஷன் இருந்து வந்தது. மத்தியில், 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது.மத்திய அரசின் கொள்கைகளை இந்த அமைப்பு வடிவமைக்கிறது. பிரதமர் தலைமையிலான இந்த குழுவில், அனைத்து மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். 3வது முறையாக பாஜ ஆட்சி அமைந்துள்ள நிலையில்
பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம், டில்லியில் இன்று நடக்கிறது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்
வஞ்சிக்கப்பட்டதாகக் கூறி, இண்டியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள்,  இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் இந்த  கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.  இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது.. கூட்டத்தில் என் பேச்சை ஏழு நாட்களுக்கு முன் எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி தெரிவித்து இருந்தனர். பட்ஜெட்டுக்கு முன்பே அதை அளித்துவிட்டேன். மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு, என் எதிர்ப்பை பதிவு செய்வேன். மேலும், மேற்கு வங்கம் மற்றும் அண்டை மாநிலங்களை பிரித்தாள, பா.ஜ., அரசு செய்யும் சதி குறித்தும் பேசுவேன். என்னை பேச அனுமதிக்கவில்லை எனில், கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்வேன் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!