Skip to content

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வருகை…. உற்சாக வரவேற்பு…

கோயம்புத்தூரில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று இரவு தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் மத்திய அமைச்சர், நாளை காலை முதல் நிகழ்வாக பீளமேடு பகுதியில் நடைபெறும் ‘ஸ்வச்சதா அபியான் –

தூய்மை பாரத’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

அதனை தொடர்ந்து காளப்பட்டி அருகே புதிய வங்கி திறப்பு விழா மற்றும் கொடிசியா அரங்கில் நடைபெறும் ரூபாய் 3500 கோடி மதிப்பிலான வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மேலும், கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ராணுவம் மற்றும் பாதுகாப்பு தளவாட ஆராய்ச்சி மையத்தையும் அவர் பார்வையிடுகிறார். இதனை அடுத்து, மாலை அவிநாசி சாலையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் நடைபெறும் மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!