பணம் பெற்று தன்னிடம் நிலமோசடி செய்துவிட்டதாக காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் மீது நடிகை கவுதமி கொடுத்த புகாரின் பேரில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சுவத்தான் என்ற பகுதியில் பல ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக அழகப்பன் சொல்லி இருக்கிறார். இதற்காக, கவுதமியிடம் அவர் ரூ. 3 கோடி பணம் பெற்றுள்ளார். பின்பு, சுமார் 64 ஏக்கர் நிலம் ரூ. 57 லட்சம் மதிப்பில் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மாவட்ட குற்றப்பிரிவில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக கவுதமி ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வழக்கு குறித்தும் தான் ஏமாற்றப்பட்டது குறித்தும் காவல்துறை அதிகாரியிடம் நேரடியாக விளக்கம் அளித்தார்.
இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இந்த மோசடி குறித்து மேலும் கேள்விகள் எழுப்பியபோது, “விசாரணை நடைபெற்று வருவதால் இதற்கு மேல் இதை பேசுவது சரியாக இருக்காது” என அவர் மறுத்தார்.