Skip to content
Home » பிஎப்ஐ மீண்டும் செயல்படுகிறதா?….கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

பிஎப்ஐ மீண்டும் செயல்படுகிறதா?….கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்ட பிறகு கேரளாவில் அதன் நிர்வாகிகளின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் டில்லியில் இருந்து என்.ஐ.ஏ.வின் முக்கிய அதிகாரிகள் கேரளாவுக்கு இரவில் வருகை தந்தனர். இவர்கள் கேரளாவில் 56 இடங்களில் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள். கேரள காவல்துறையின் உதவியோடு இந்த சோதனை நடைபெற்றது. இதில் எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல ஆலப்புழா, மலப்புரம் மாவட்டங்களில் தலா 4 இடங்களிலும், திருவனந்தபுரம், பத்தினம் திட்டா மாவட்டங்களில் தலா 3 இடங்களிலும், கொல்லம், கோழிக்கோடு மாவட்டங்களில் தலா இரண்டு இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்தியா முழுக்க தடை செய்யப்பட்டாலும், கேரளாவில் இந்த அமைப்பு ரகசியமாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்த நிலையிலேயே இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட இதன் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!