Skip to content
Home » 5 மாநிலங்களில் என்ஐடி அதிரடி சோதனை

5 மாநிலங்களில் என்ஐடி அதிரடி சோதனை

என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீர், மராட்டியம், டில்லி, உத்தர பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் 22 இடங்களில்  இன்று என்ஐஏ சோதனை நடக்கிறது.பயங்கரவாத சதித்திட்டம் பற்றிய விசாரணையின் முக்கிய முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடந்து வருகிறது. இதில் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் என கூறப்படும் முக்கிய நபர்கள், நிறுவனங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

இந்த சோதனையில், அடுத்து என்ன சதி திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன? அல்லது என்னென்ன தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன? என்பன உள்ளிட்ட விவரங்கள், முக்கிய சான்றுகள் ஆகியவற்றை சேகரிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதனுடன் தொடர்பில் உள்ளவர்கள் பற்றி இந்த சோதனை நடந்து வருகிறது என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!