புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி மே 28-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முதான் நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைக்க வேண்டுமென வலியுறுத்தி 19 எதிர்கட்சிகள் கூட்டாக அறிக்கை வௌியிட்டது. குடியரசுத் தலைவரை கொண்டு நாடாளுமன்ற கட்டடத்தை திறந்துவைக்கக் கூடாதா என காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், விசிக, மதிமுக
உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்துள்ளது. இந்தநிலையில் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் புதுடெல்லியில் நாளை திறக்கப்பெறவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவிற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்த தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டார்கள்.