Skip to content
Home » திருமணத்தன்று விஷம்குடித்த மணமக்கள்…. மாப்பிள்ளை பலி

திருமணத்தன்று விஷம்குடித்த மணமக்கள்…. மாப்பிள்ளை பலி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மணமக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் திருமணத்தன்று இருவரும் விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மணமகன் (வயது 21) பரிதாபமாக உயிரிழந்தார்.மணமகள் (வயது 20) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.கடந்த பல நாட்களாக மணமகள் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணமகனை வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய தொழில் காரணமாக திருமணத்திதார்.

இதையடுத்து இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. செவ்வாய்க்கிழமையன்று ஆர்ய சமாஜ் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணத்தன்று மணமகன் விஷம் குடித்துள்ளார்.  இது குறித்து மணமகளிடம் கூறினார். இதையடுத்து மணமகளும் விஷம் குடித்தார்.

உடனடியாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.   மணமகன்  வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதே நேரத்தில் மணமகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!