Skip to content
Home » மக்களவையில் 267 எம்.பிக்கள் புதுமுகங்கள்

மக்களவையில் 267 எம்.பிக்கள் புதுமுகங்கள்

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி என இரு பெரும் தேசிய கட்சிகள் எதிரெதிராக களம் கண்டன.

இதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை கடந்த 4-ந்தேதி நடந்தது. இதில், பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளை கைப்பற்றி 2-வது பெரிய கட்சியாகவும், 37  தொகுதிகளை கைப்பற்றி சமாஜ்வாடி கட்சி 3-வது பெரிய கட்சியாகவும் உள்ளன.

சமீபத்தில் நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில், 280 எம்.பி.க்கள் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 267 எம்.பி.க்கள் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர். இந்த தேர்தலில் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மொத்தம் 267 எம்.பி.க்கள் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர். இந்த தேர்தலில் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மொத்தம் 263 எம்.பி.க்கள், இதற்கு முன் எம்.பி.க்களாக பதவி வகித்தவர்கள்.
ஒருவர் மக்களவையில் 7 முறை எம்.பி.யாக பதவி வகித்தவர். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 8 பேர் அவர்களுடைய தொகுதியை மாற்றி கொண்டனர். ஒருவர் 2 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 9 எம்.பி.க்கள் 17-வது மக்களவை தேர்தலின்போது, வேறுகட்சியில் இருந்தவர்கள். மற்ற 8 பேர், இதற்கு முன் இருந்த கட்சியில் இருந்து பிரிந்து வந்த கட்சியை சேர்ந்தவர்கள். தேர்தலில் போட்டியிட்ட 53 மந்திரிகளில் 35பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!