நீட் தேர்வில் நடந்துள்ள மெகா மோசடி ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த கொண்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.இந்த நிலையில் நீட் தேர்வே வேண்டாம் என்பது தமிழ் நாட்டின் நிலை. எனவே நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வரும் 3ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் முன் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாணவர் அணியினர் அறிவித்து உள்ளனர்.