Skip to content
Home » நெடுஞ்சாலைத் துறை மறுசீரமைப்பு…. 5 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு..

நெடுஞ்சாலைத் துறை மறுசீரமைப்பு…. 5 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு..

  • by Senthil

நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களைக் கொண்ட ‘பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு’ உருவாக்கப்படும் என என சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள 9479 பாலங்களை ஆய்வு செய்து உறுதித்தன்மையை கண்டறிந்து பழுதுகள் நீக்க ‘பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு’ உருவாக்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்,  நெடுஞ்சாலைத் துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.  5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 9,479 பாலங்களை ஆய்வு செய்து அதன் உறுதி தன்மையை கண்டறிந்து பழுது நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக  நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலை துறை பொறியாளர்களைக் கொண்ட  ‘பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு’ குழு அமைக்கப்பட்டிருக்கிறது . நெடுஞ்சாலை துறையின் கீழ் கட்டப்பட்ட பாலங்களை ஆய்வு செய்து பழுது ஏற்பட்டு இருப்பின் அதனை உடனுக்குடன் சீரமைக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்தக் குழுவில் நெடுஞ்சாலை துறை இயக்குனர் செல்வதுரை,  கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ்,  சாலை மேம்பாட்டு நிறுவன தலைமை மேலாளர் பழனிவேல்,  கண்காணிப்பு பொறியாளர் ஆர். கிருஷ்ணசாமி, தேசிய நெடுஞ்சாலை துணைத் தலைமை பொறியாளர் சிவகுமார் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!