Skip to content

அரியானா புதிய முதல்வராக நயாப் சைனி தேர்வு

  • by Authour

அரியானாவில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க.  கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.  கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக ஜனதா கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது.  ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் துணை முதல்-மந்திரியாக உள்ள துஷ்யந்த் சவுதாலாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தொகுதி பகிர்வில் உடன்பாடு ஏற்படாத சூழலில், இந்த மோதல் முற்றியது.  இதைத்தொடர்ந்து முதல்வர் கட்டார் இன்று ராஜினாமா செய்தார்.  அவர் கவர்னரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.இந்த நிலையில் அரியானா  புதிய முதல்வராக நயாப் சைனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!