Skip to content
Home » நம்ம ஸ்கூல் பவுண்டேசன்….. 5 லட்சம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

நம்ம ஸ்கூல் பவுண்டேசன்….. 5 லட்சம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. சென்னையில் நம்ம ஸ்கூல் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார். அனைத்தையும் அரசால் செய்து விட முடியாது. மக்களும் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முதலமைச்சர், நாம் உயர்வதற்கு காரணமாக இருந்த பள்ளியை நாம் உயர்த்துவதற்காக தான் இந்த திட்டம் தொடங்கப்படுவதாகவும் கூறினார்.இதனைதொடர்ந்து நம்ம ஸ்கூல் பவுண்டேசனில் நிதியுதவி அளித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சட்டத்துறை அமைச்சர் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நம்ம ஸ்கூல் பவுண்டேசன்  திட்டத்தின்படி ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!