Skip to content
Home » சாலையில் நின்ற காட்டு யானை….டூவீலருடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்..

சாலையில் நின்ற காட்டு யானை….டூவீலருடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்..

  • by Senthil

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி அருகே சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானைைய பார்த்து டூவீலரில் சென்ற முதியவர் பயத்தில் தவறி கீழே விழுந்து உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை திம்பம் மலையில் இருந்து தலமலை செல்லும் அடர்ந்த வனச்சாலையில் டூவீலரில் சென்ற முதியவர் ஒருவர் எதிர்பாரத விதமாக தன் எதிரே  யானை நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதில் அச்சமடைந்த அவர் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் டூவீலருடன் விழுந்தார். பின்னர் உடனடியாக முதியவர் சுதாரித்து எழுந்து யானையிடமிருந்து தப்பி ஓடிவந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!