தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:
பாஜக-வின் தமிழ்நாடு தலைவரானதை நான் பெருமையாக உணர்கிறேன்.மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி ஆகியவை மட்டுமே பாஜக-வின் குறிக்கோள், கொள்கை. உறுதியாக தேசிய தலைமை நினைப்பதை தமிழக பாஜக-வால் சாதித்துக் காட்ட முடியும்.
பாஜக-வின் பலம் அதன் கொள்கைகளும், அதன் தொண்டர்களும் தான். இந்த இரண்டும் தான் தற்போது எனக்குள் சேர்ந்துள்ளது.
பாஜக என்றைக்குமே சாதி ரீதியாக தலைவர்களை தேர்ந்தெடுப்பதில்லை. தகுதியின் அடிப்படையிலும், தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் மட்டுமே அனைத்து நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கும். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களைப் பார்த்தே மக்கள் வாக்களிக்கிறார்கள்.
இது உண்மை இல்லை. ஆந்திரா, கேரளா, பஞ்சாப் போன்ற பல மாநிலங்களில் தேசிய தலைமை விதிவிலக்கை அளித்திருக்கிறது. அதேபோல் தமிழகத்திலும் சில மாவட்ட தலைவர்களுக்கான விதிகளில் விதிவிலக்கு அளித்திருக்கிறோம். இது வழக்கமான நடைமுறை தான்.
அண்ணாமலை மிகச் சிறப்பாக பணியாற்றினார் என்பது சரியே. ஆனால், ஒவ்வொரு தலைவரின் காலகட்டத்திலும் பாஜக வளர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு தலைவரும் தங்களுக்கே உரிய பாணியில் செயல்படுவார்கள். அனைவரின் இலக்கும் கட்சியின் வளர்ச்சி மற்றும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை அமைப்பதே.
அதிமுக முக்கிய தலைவர்கள் மீதான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வழக்குகள் கூட்டணி முடிவால் இனி நீர்த்துப் போகும் என்கிறார்களே..?
சட்டம் தன் கடமையை செய்யும்.
அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளுக்கு இம்முறை நடிகர் விஜய் பெரும் சவாலாக இருப்பார் போலிருக்கிறதே… அதைச் சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
விஜயின் கட்சி தற்போது தான் துவக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்ளாகவே சவால், சமாளிப்பு என்பதெல்லாம் தேவையில்லை எனக் கருதுகிறேன்.
யூகங்களுக்கும், வதந்திகளுக்கும் நான் பதில் சொல்லத் தேவையில்லை .
அதிமுக எம்.பி. தம்பிதுரை மத்திய அமைச்சராகலாம் என்ற பேச்சு நீண்ட நாட்களாகவே இருக்கிறது. அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்க பரிந்துரைப்பீர்களா?
இது குறித்து பாஜக தேசிய தலைமை தான் முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.