Skip to content

புதுகை…….பேரையூர் நாகநாதசுவாமி தேரோட்டம்

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே
பேரையூர் கிராமத்தில் அமைந்துள்ள  நாகநாதசுவாமி உடனுறை பிரகதாம்பாள் தேர்த்திருவிழா கடந்த ஐந்தாம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் நாகநாதர் உடனுறை பிரகதாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதிஉலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம்  வெகு விமர்சையாக நடைபெற்றது .இதில் நாகநாத சுவாமி உடனுறை பிரகதாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேரையூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் தேரில்அமர்ந்தவாறு நாகநாதர் சுவாமி உடனுறை பிரகதாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!