Skip to content
Home » நாகை அருகே 4 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்….

நாகை அருகே 4 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்….

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட வடக்காலத்தூர், விக்கினாபுரம், புதுச்சேரி, திருக்கணங்குடி ஊராட்சிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 கிராம மக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் வடக்காலத்தூர் பாப்பாகோவில் வரை புதிய தார்சாலை அமைக்க வேண்டும், நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும், ஊராட்சி முழுவதும் குடிநீர் உப்பு நீராக இருப்பதால் நல்ல குடிநீர் வழங்க வேண்டும், இரவு நேரத்தில் குறையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், சமுதாய கூடம், நூலகம், கிராம அங்காடியில் மது அருந்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வடக்காலத்தூர் பெரிய வாய்க்கால், ஆவராணி வாய்க்கால்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம பெண்கள் கூறும்போது திருக்கண்ணங்குடி ஊராட்சியில் டிரான்பார்மர் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லையென்றும் இதனால் குழந்தைகள் உள்பட அனைவரும் உறக்கமில்லாமல் பாதிக்கப்படுவதாகவும், மிக்சி , கிரைண்டர் அரைப்பதற்கு கூட வழியில்லாமல் சிரமப் படுவதாகவும், அதே போல் வடக்காலத்தூர் ஊராட்சியில் நிலத்தடி நீர் முழுமையாக உவர்நீராக இருப்பதால் குடிநீர் இல்லாமல் அவதிப்படுவதாக குற்றம் சாட்டிய அவர்கள். புதிய டிரான்பார்மர் அமைத்து முழுமையான மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் மூலம் நல்ல தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!