Skip to content

நாகை அருகே ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட நடைமேடை சரிந்து விழுந்தது…

நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சலவைக்குலம் 3 மாதங்களுக்கு முன்பு 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 1 மணி நேரம் பெய்த கனமழைக்கு குளத்தின் ஒருபகுதி நடைமேடை மற்றும் 2 கால்வாய்கள் மண் அரிப்பு ஏற்பட்டது சரிந்து விழுந்தது. இந்த நிலையில் நாகையில் நேற்று ஒரு இரவு பெய்த மழைக்கே

குளத்தின் சுற்று நடைமேடை, வடிகால்வாய் மண் அரிப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தது. தடுப்பு சுவர் அமைக்காமல் தரமற்ற முறையில் குளத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதால் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாகவும், மின்மாற்றி மற்றும் மின் கம்பங்கள் குளத்தில் சாய்ந்து பெரும் விபத்தை ஏற்படுத்தாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!