தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட இணை ஆணையர் மண்டலம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தமன் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில்
அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்சிகள் நடைப்பெற்றது. கலைஞர் வேடமிட்டு நடனமாடிய பள்ளி மாணவிகள் , கண்ணகி நாடகத்தை தத்ரூபமாக நடித்து காட்டி அசத்தினர். தொடர்ந்து பாட்டு , டான்ஸ் என அசத்திய மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் ராணி, பள்ளி தலைமை ஆசிரியர் மீனாட்சி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.