Skip to content
Home » நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் டாக்டரை மிரட்டிய பாஜக நிர்வாகி…. போலீஸ் வலை

நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் டாக்டரை மிரட்டிய பாஜக நிர்வாகி…. போலீஸ் வலை

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பணியாற்றிவரும் டாக்டர் ஜன்னத் இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம் என்பவர் கடந்த 24.5.2023 இரவு 11.30 மணியளவில்  ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

அரசு பணியின் போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும், மருத்துவர்க்கு என்று சீருடை கிடையாதா? உண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானா என்று கேள்வி எழுப்பி  தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார். அப்போது பெண் மருத்துவர் அனுமதி இன்றி வீடியோ பதிவு செய்வது நாகரீகம்  என அவர் வீடியோ பதிவு செய்வதை மருத்துவரும் தனது செல்போனில் பதிவு செய்தார். இந்த இரு காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே ஹிஜாப் விவாகர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூண்டி மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனிடையே பெண் மருத்துவரை பணி செய்ய விடாமலும், அவரின் அனுமதி இன்றி வீடியோ பதிவு செய்த பாஜக நிர்வாகி மீது கீழையூர் போலீசார் 294 பி 353 298 67 ( அரசு மருத்துவரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மத உணர்வை தூண்டுவது, பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்களை அனுமதியில்லாமல் வீடியோ எடுத்தது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!