Skip to content
Home » நாகையில் ஈபிஎஸ் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…..

நாகையில் ஈபிஎஸ் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…..

  • by Senthil

ஓ பன்னீர்செல்வம் எதிர்த்த வழக்கில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக நாகையில் ஈபிஎஸ் அணியினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை பேருந்து நிலையம் முன்பு

நடைபெற்ற இந்த நிகழ்வில் ஈபிஎஸ் அணியினர் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என கோஷங்களை எழுப்பிய அவர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள், பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு லட்டுகளை வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!