Skip to content

நாகை அருகே மாற்றுத்திறனாளியை கட்டிப்போட்டு எரித்த கொடூரம்…

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கன்னியை அடுத்த காமேஸ்வரம் மீனவர் காலனி சேர்ந்தவர் ராஜேஷ்(45). மாற்றுத்திறனாளியான இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மனைவி செல்வி 100 நாள் வேலைக்கும், அவருடைய குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும் சென்றதால் ராஜேஷ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ராஜேஷின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலறி அடித்து ஓடி வந்து தீயை அணைத்த போது ராஜேஷ் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தீயில் எரிந்து கொண்டு இருந்துள்ளார். உடனே தீயை அணைத்த பொதுமக்கள் ராஜேஸை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். துணி மற்றும் கயிற்றால் கை கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ராஜேஷ் 80 சதவீத தீக்காயங்களுடன் மரணபடுக்கைக்கு சென்றார். பின்னர் நாகை நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். நாகை அருகே மாற்றுத்திறனாளி கைகால்கள் கட்டப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!