Skip to content
Home » 5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட அரசு பஸ்…. உற்சாக வரவேற்பு…

5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட அரசு பஸ்…. உற்சாக வரவேற்பு…

  • by Senthil

நாகை மாவட்டம் , திருக்குவளை அடுத்துள்ள தெற்குபனையூர் ஊராட்சி முப்பத்திகோட்டகம் கிராமத்திலிருந்து திருவாரூருக்கு இயக்கப்பட்ட பேருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த வழித்தடத்தில் மீண்டும் அந்த பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் பெண்களுக்கான இலவச பயண வசதியுடன் கூடிய நகர பேருந்தை நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து,

தொடர்ந்து பேருந்தில் பொதுமக்களுடன் அமர்ந்து சிறிது தூரம் பயணம் மேற்கொண்டனர்.
முன்னதாக ஐந்து ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்படும் பேருந்திற்கு கிராம மக்கள் ஒன்று கூடி பேருந்துக்கு பொட்டு வைத்து,மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பேருந்தானது முப்பத்திக்கோட்டகத்திலிருந்து சாட்டியக்குடி, விடங்களூர், ஆதமங்கலம், மாவூர் வழியாக திருவாரூர் வழித்தடத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வசதிக்காக நாள்தோறும் காலை மற்றும் மாலை என இருமுறை இயக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!