Skip to content

உலக மக்கள் தொகை தினம்…. விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த கலெக்டர்…

  • by Authour

நாகையில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார். பேரணியில் பயிற்சி செவிலியர்கள் சுகாதார ஊழியர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  உலக மக்கள் தொகை தினத்தை யொட்டி நாகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் நாகை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார். பேரணியில் பயிற்சி செவிலியர்கள் சுகாதார ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக நாகை தனியார் கல்லூரி வரை சென்றனர். முன்னதாக் உலக மக்கள் தொகை உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!