Skip to content

நாகை அருகே 600 மதுபாட்டில்களை மறைத்து கடத்தி சென்ற நபர் கைது…

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதியான நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அப்படி மதுபாட்டில்கள் கடத்தி வரும் குற்றவாளிகள் மீது நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷிங் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நாகூர் வெட்டாறு தற்காலிக சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில்

ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே எம்.ஐ.டி இருசக்கர வாகனத்தில் ஒருவர் கால்நடைகளுக்கு இலைதழைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துள்ளார். கால்நடைகளுக்கு மரக்கிளைகளை ஏற்றிவந்த நபரை அங்கிருந்த போலீசார் மரித்துள்ளனர். ஆனால் அவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் துரத்திசென்று பிடித்தபோது அவர் இலை தழைகளை கொண்டு மறைத்து போலீசாருக்கு சந்தேகம் வராது வகையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்துள்ளார். பின்னர் காவல்நிலையம் கொண்டு வந்து இலை தழைகளை அப்புறப்பத்தியபோது 600 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நாகை எஸ்பி ஹர்ஷிங் தலைமையிலான போலீசார் வெளிமாநில மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!